பென்சன் மாற்றக் கோரிக்கையை ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோவையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பிஎஸ்என்எல் ஓய்வூதிய சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் டி.கே.பிரசன்னா, பிஎஸ்என்எல்இயு மாநிலத் தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், மாநில உதவிப் பொருளாளர் நிசார் அகமது உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.