திருப்பூர், செப். 2 - திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பா ளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பி யாபாளையம், அரசு நடுநிலைப் பள் ளியை கிராமப்புற மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அரசு மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரியுள்ளனர். இது தொடர்பாக திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி கருக்கங்காட்டுபுதுரை சேர்ந்த க. பழனிச்சாமி, மற்றும் பள்ளி பெற் றோர் ஆசிரியர் கழகத்தினர், முன் னாள் மாணவர்கள் கொடுத்த மனு வில் கூறியிருப்பதாவது: திருப்பூரின் வடக்கு பகுதியில் பெருமாநல்லூ ருக்கு அப்பால், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்பியாபா ளையம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மிகுந்த இட நெருக்கடிக்கு இடையில் சுமார் 350 குழந்தைகள் படித்து வரு கின்றனர். இவர்கள் உயர்நிலை, மேல் நிலை வகுப்புகளுக்கு செல்வதற்கு பெருமாநல்லூருக்கு அப்பால் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இல்லை. மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் பெருமா நல்லூருக்கு 3 கிலோமீட்டர் தொலை வில் கணக்கம்பாளையம் சாலை யில் அமைந்துள்ள அரசு மேல்நி லைப்பள்ளி அல்லது திருப்பூர் சாலை யில் பெருமாநல்லூரில் அமைந் துள்ள உயர்நிலைப் பள்ளிக்கு கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு இடையே உயிர் பயத்துடன் பய ணிக்க வேண்டி உள்ளது. இது தவிர ஈரோடு மாவட்ட எல் லைக்குள், பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலையப்பா ளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அல்லது 12 கிலோமீட்டர் தொலை வில் உள்ள குன்னத்தூர் அரசு மேல்நி லைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். இந்த நெருக்கடியான நிலையில் பலர் தங்கள் குழந்தைகளை உயர் நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு அனுப்புவதில்லை. அவர்கள் பள்ளி இடைநிற்றல் ஆகி குழந்தை தொழி லாளர்களாகவும், சிறார் வயதில் திரு மணம் முடிக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது. குறிப்பாக பெருமாநல்லூர், ஈட்டி வீரம்பாளையம், வள்ளிபுரம், தொர வலூர் ஆகிய நான்கு ஊராட்சிக ளும் மிக வேகமாக மக்கள் பெருக்கம் அதிகம் உள்ள நகரங்களாக மாறி வருகின்றன. இத்தகைய சூழ்நிலை யில் இங்குள்ள குழந்தைகள் உயர் கல்விக்கு தொலைதூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இந்த ஒட்டுமொத்த சூழ்நி லையை கருத்தில் கொண்டு அப்பி யாபாளையம் அரசு நடுநிலைப் பள் ளியை, அரசு மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தி தரவேண்டும் என்று கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், கிராமப் புற குழந்தைகளின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அப்பியா பாளையம் அரசு நடுநிலைப் பள் ளியை உடனடியாக அரசு மேல்நி லைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள் ளனர்.