தருமபுரி, நவ.15- தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஜக்கசமுத்திரம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜக்கச முத்திரம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சுற்றி 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் முழுவதும் விவசாயம் செய்து வருகின்றனர்.இங்கு விளையும் விவசாய பொருட்களை இராயக்கோட்டை, ஓசூர், பெங்களூரு, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு எடுத்து சென்று சந்தைப்படுத்தப்படுகிறது. தற்போது தருமபுரியிலிருந்து, பெங்களூரு வரை தேசிய நெடுஞ்சாலை -844, 6 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகி றது. இச்சாலையின்போது ஜக்கசமுத்திரம், பொம்மனூர் அருகே மேம்பாலம் அமைக்கப்பட்டு கடந்து செல்கிறது. எனவே, ஜக்கசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் நலன் கருதி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல மேம்பாலத்தின் இருபுறமும் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்தனர்.