சேலம், ஆக.10- ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, மத்திய தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள சர்வாதிகார குற்ற வியல் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெற வேண்டும். மோட்டார் தொழிலை அழிக் கும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல் படுத்தக்கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். பணமாற்றல் என்ற பெயரால் பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. புதிய ஓய்வூ தியத் திட்டத்தை கைவிட வேண்டும். முறை சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாயி களின் விளைப் பொருள்களுக்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வேலையின்மை திண்டாட்டத்தை போக்க, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உரு வாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனி யன்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்திலுள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல்வம், தொமுச மாவட்டச் செயலாளர் பொன்னி.பழனியப்பன், ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் வி.முருகன், எச்எம்எஸ் மாநில துணைத் தலைவர் பி.கணேசன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் எம்.நடராஜன், ஏஐசிசிடியு மாவட் டத் தலைவர் வி.பாலு, ஏஐயூடியூசி மாவட்டத் தலைவர் பி.மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஐஎன் டியுசி மாவட்டத் தலைவர் கே.சிவலிங்கம் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாவட் டச் செயலாளர் பி.ஜீவானந்தம், இணைச் செயலாளர்கள் சி.முரளி, ஆணஸ்ட்ராஜ், ஏஐ டியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, தமிழ் நாடு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ஜே.பிரதாபன், எல்பிஎப் மாவட் டச் செயலாளர் பி.எம்.சண்முகராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ஜே.பழனி, எச்எம்எஸ் பேரவைச் செயலாளர் ஆர்.முருகானந்தம், ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகி வி.சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.