districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அனுமதி இல்லாத வேகதடை அகற்றம்

கோவை, ஏப்.29- மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 12 வேகத்தடைகள் அகற்றப் பட்டதாக கோவை மாநகராட்சி ஆணை யாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் வெளியிட்ட அறிக் கையில், மாநகராட் பகுதிகளில்  அனுமதி யின்றி வேகதடைகள் அமைக்கப்பட் டுள்ளது.  இதில் 12 வேகத்தடைகள் தற்போது அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, 346  இடங்களில் வேகத்தடை மற்றும் நடைபாதை களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் நடக்கும் பகுதியில் குறியீடு கள் (Marking) அமைக்கும் பணிகள் நடை பெற்றுள்ளது. மேலும் இப்பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் மரணம்

கோவை, ஏப்.29- கோவை நீதிமன்ற வளாகத்தில், கணவ னால் திராவகம் வீசப்பட்ட மனைவி கவிதா  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை யடுத்து இவ்வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை - ராமநாதபுரத்தை சேர்ந்த சிவக் குமார் லாரி ஓட்டுநர். இவரது மனைவி கவிதா.  இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரண மாக கணவரை பிரிந்து வாழ்ந்து  வந்தார். இந் நிலையில், சிவக்குமார் தனது மனைவியை  வசிக்கும் இடத்துக்குச் சென்று அவரை தன் னுடன் வரும்படி கூறினார். ஆனால் அவர் வரவில்லை. இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜ ராக கவிதா கடந்த மாதம் 23 ஆம் தேதி வந்தார்.  அப்பொழுது நீதிமன்றத்திற்கு வந்த சிவக் குமார் நீதிமன்ற வளாகத்திலேயே தனது மனைவி மீது ஆசிட் வீசினார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.  இதில் படுகாயமடைந்த கவிதா கோவை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர் பாக  பந்தய சாலை காவல் துறை வழக்குப்  பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து  கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  அமில வீச்சினால் 80 சதவிகித அளவிற்கு காயமடைந்து  கடந்த ஒரு மாத காலமாக  சிகிச்சை பெற்று வந்த கவிதா வெள்ளி யன்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதற்கிடையில், சிறையில் இருக்கும் சிவக்குமார் தனக்கு ஜாமீன் கேட்டு கோவை  மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது  கவிதா இறந்ததினால் கொலை வழக்காக  மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை

தாராபுரம், ஏப்.29 - தாராபுரம் அடுத்த கன்னிவாடி சந்தையில்  10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் கன்னிவாடி முக்கிய சந்தையாக கருதப்படுகிறது. இங்கு வாரந்தோறும் வெள்ளியன்று நடைபெறும் இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ள கோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அவற்றை வாங்குவதற்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். இந்நிலையில், கடந்த வார சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சந்தையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்திற்கு விலை  போனது. ஆடுகளுக்கு விலை குறைந்த தால், சில விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யாமல் திரும்ப கொண்டு சென்றனர்.

 நீதிபதிகள் பணியிட மாற்றம்

உதகை, ஏப்.29- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசா ரித்து வந்த உதகை மாவட்ட  அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், பொறுப்பு நீதிபதி யாக இருந்து கோடநாடு வழக்கை விசாரித்த உதகை  மகிளா நீதிமன்ற நீதிபதி நாரா யணன் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். நீதிபதி முருகன் சேலம் தொழிலார்  நல (லேபா்) நீதிமன்றத் துக்கும், நீதிபதி நாராயணன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர். உதகை மாவட்ட அமா்வு  நீதிபதியாக எ.அப்துல் காதர்  புதிதாக பொறுப்பேற்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மாணவிக்கு பாலியல் தொல்லை  போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

கோவை, ஏப்.29- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, மாணவி யின் பெரியப்பா போச்சோ சட்டத்தில் கைது செய்யப் பட்டார். கோவை அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி. இவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் இவர் கோவையில் உள்ள  தனது பெரியப்பா (52) வீட்டில் தங்கியிருந்தார். இவருக்கு  இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், தனியார் மில்லில்  சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 15  வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சிறுமியின் பெரியப்பா திடீரென சிறுமியிடம் தவறாக நடந்து  கொண்டுள்ளார். அவர் இதற்கு முன்பும் சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாதாக தெரிகிறது.  சிறுமியை மிரட்டியிருந்ததால் யாரிடமும் சொல்லாமல்  இருந்து வந்தார். இந்நிலையில், பெரியப்பாவின் தொல்லை தாங்காமல், தாயிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் துடியலூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் வீட்டுக்கு  சென்று அங்கு இருந்த அவரது பெரியப்பாவை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

கோடை வெயில் அதிகரிப்பால் நண்பகலுக்கு மேல் 100 நாள் வேலை செய்யாமல் இருக்கலாம்: ஆட்சியர்

திருப்பூர், ஏப்.29 – கோடை வெயில் அதிகரிப்பின்  காரணமாக நூறு நாள் வேலை  செய்வோர் நண்பகல் 12 மணிக்கு  மேல் வேலை செய்யாமல் இருக் கலாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார். இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிக மாக உள்ளதால் அனைத்து மக் களும் தேவையான பாதுகாப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ளு மாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் கூறியுள்ளார். இது தொடர்பாக சனியன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, உடலின் நீர்ச்சத்து  குறையாமல் பராமரிக்க தேவை யான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடி நீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர், மோர் மற்றும் பழச் சாறுகள் பருகலாம். வெளிர் நிற முள்ள, காற்றோட்டமான ஆடை களை அணிய வேண்டும்.  தனியே வசிக்கும் முதியவர் களின் அருகாமையில் தொலை பேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்  கொள்ளவும். வெப்ப அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும், குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். நூறு நாட்கள் பணியின்போது நண்பகல் 12 மணிக்கு மேல் பணி  செய்யாமல் இருக்கலாம். கோடை  வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுக ளிலும் மின் ஒயர்கள் உருகி சார்ட்  சர்க்யூட் ஏற்பட்டு கூரை வீடுகள்  எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள  இரும்புகள் சூடாகி மின் விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும்  தன்மையை பெறக்கூடும். எனவே, கோடை முடியும் வரை  எச்சரிக்கையாக இருக்க வேண் டும். விலை உயர்ந்த பொருட்கள்,  நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது.  விறகு அடுப்புகளை பயன்படுத்திய  பிறகு தண்ணீர் ஊற்றி அணைத்து  விட வேண்டும் என மாவட்ட ஆட்சி யர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.

குரல்குட்டையில் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

போராட்டம் நடத்த உள்ளதாக சிபிஎம் எச்சரிக்கை

திருப்பூர், ஏப்.29 - குரல்குட்டை ஊராட்சியில் கழிவு களால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது.  இதை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர்  கி.கனகராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, உடுமலை ஒன்றியம் குரல்குட்டை கிழக்கு சுடுகாடு மற்றும் நீர் வழிபள்ளம் குப்பைக் கிடங்காக மாறி துர் நாற்றம் வீசுகிறது, நோய் பரப்பும் இடமா கவும் மாறியுள்ளது. கிழக்கு பள்ளத்தில் தனியார் மில்லின் கழிவுநீர், குப்பைகள், கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப் பட்ட தனியார் மில்லின் மீதும், கோழிக் கழிவுகள் கொண்டுவந்து கொட்டுவோர் மீதும், சுடுகாட்டில் கட்டிடக் கழிவுகள் கொட்டு வோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை மனு கொடுத்தும்,  போராட்டம் நடத்தியும் அதேநிலை தொடர் கிறது. பள்ளங்களில் பன்றிக் குடிசைகள் உட்பட பல்வேறு ஆக்கிரமிப்புகளும் நீடித்து  வருகிறது. உடுமலை ஊராட்சி ஒன்றியமும்,  குரல்குட்டை ஊராட்சியும் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக் காதபட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அடுத்தகட்ட போராட்டம் முன் னெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வாங்காத பொருள்களுக்கு ரசீது:  கூட்டுறவு பதிவாளர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.29- நியாய விலைக்கடைகளில் வாங்காத  பொருள்களுக்கு ரசீது போட்டதாக புகார்  வந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும்  உணவு பொருள்கள் மானிய விலையில்  நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரு கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான  குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வரு கின்றனர். இந்த நிலையில், சில நியாய விலைகளில்  ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவ தாகவும், பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத்தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் ஒரு சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார். அதில், நியாய விலைக் கடைகளில் வாங்காத பொருள்கள் வாங்கா மலேயே வாங்கியதாக குடும்ப அட்டைத் தாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த நியாய விலைக்கடையின் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு சங்க பதி வாளர் தெரிவித்துள்ளார்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டுதல் குழு

சென்னை, ஏப்.29- 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள்  11 ஆம் வகுப்பிற்கும், 12 ஆம் வகுப்பு முடிந்த  மாணவர்கள் உயர்கல்விக்கும் செல்ல வேண்டும் என்பது கல்வித்துறையின் நோக்க மாக உள்ளது. அதன் அடிப்படையில் பல் வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. அதன் அடிப்படையில், 10 ஆம் வகுப்பு  முடித்த மாணவர்கள்,11 ஆம் வகுப்பில்  என்னென்ன பாடப்பிரிவுகள் இருக்கின்றன  என்பதை தெரிந்துகொள்ளும் வகையிலும்,  அதேபோல, 12 ஆம் வகுப்பு முடித்த மாண வர்கள் உயர்கல்வியில் என்னென்ன படிப்புகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் வகையிலும் முக்கிய பாடப் பிரிவுகள் வாரியாக, வீடியோ வாரியாக பள்ளிக்கல்வித்துறை தயாரித்து வெளியிட்டி ருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அனைத்து அரசு  மேல்நிலைப்பள்ளிகளிலும் உயர்கல்வி வழி காட்டுதல் குழு உருவாக்கப்படவேண்டு மென அறிவுறுத்தியுள்ளது. அந்தந்த பள்ளி  தலைமையாசிரியர் தலைமையில் 8  உறுப்பினர்களை கொண்டு குழு செயல்பட  வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த பள்ளி மாணவர் களுக்கு உயர்கல்வியில் என்னென்ன  பாடப்பிரிவுகள் உள்ளது என்பதையும்,  எந்த பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித் தால், பின்னாளில் என்ன வேலைக்கு செல்ல முடியும் என்பது பற்றிய விரிவான தகவல் களை எடுத்துரைக்கவேண்டும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதற் கான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டுள்ளது.