உடுமலை, அக்.14 - தனியார் நிறுவனத்தினரின் அத்துமீற லால் திருமூர்த்தி அணையின் பாதுகாப்பு கேள்விகுறியாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி கள் இது குறித்து நடவடிக்கை எடுத்தனர். உடுமலை திருமூர்த்தி அணை 3.75 லட்சம் ஏக்கர் விவசாய பாசன ஆதாரமாகவும், பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த அணை யைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு கடும் விதி களை வகுத்துள்ளது. திருமூர்த்தி அணை யின் மேல் பகுதியில் தண்ணீர் திறப்பு சமயங் களில் கூட சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக் கப்பட்டுள்ளது. அரசு உத்தரவின்படி செயல்ப டும் மீன்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பயிற்சி பெற்ற மீனவர்கள் மட்டுமே அணையின் நீர் பரப்பில் பரிசல்கள் மூலம் சென்று மீன் பிடிப்பார்கள். அணையின் பாது காப்பு மற்றும் பொதுமக்கள் உயிர் சம்பந்த மானதாக இருப்பதால் இப்படி கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு நடை முறையில் இருந்து வருகிறது. ஆனால், சில நாட்களாக அணைப்பகுதி யின் அருகாமையில் தனியார் தங்கும் விடுதி கட்டி வாடகைக்கு விட்டு பணம் வசூலித்து வரும் “கேம்ப் ஸ்பிளிண்டர் நேசனல் அட் வென்சர்ஸ்” என்னும் தனியார் நிறுவனம் தன் னுடைய விடுதியில் தங்குபவர்களை அணை யின் நீர் பரப்பு பகுதிகளில் பாதுகாப்பு இல்லா மல், படகுகளில் பயணம் செய்ய வைப்பது டன், கேளிக்கை விளையாட்டுகளையும் நடத்தி வருகிறார்கள். திருமூர்த்தி அணைப்ப குதியில் பகலிலேயே அனுமதியில்லை என் னும் நிலையில், விதிமுறைகளை மீறி செயல் பட்ட இந்த தனியார் நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், சனியன்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் திருமூர்த்தி அணையில் அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் சங்கம் புகார் அளித்தது அனைத்து உண்மை யாக இருந்ததால், உடனடி நடவடிக்கை யாக அணையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இது குறித்து தென்னை விவசாயிகள் சங் கத்தின் தலைவர் உடுக்கம்பாளையம் எஸ்.பரமசிவம் தெரிவிக்கையில், சங்கத்தின் சார் பில் அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மகிழ்ச்சி. இதுநாள் வரை அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக் கிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துமீறல் செய்த தங்கும் விடுதியை அகற்ற வேண்டும். மேலும் பல ஆண்டுகள் தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார் பில் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் இயக்கி வந்த படகுத்துறையை மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். திரு மூர்த்தி மற்றும் அமராவதி அணைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமாராக்கள் அமைக்க வேண்டும் என்றார்.