districts

img

அந்தியூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் செம்படை பேரணி

ஈரோடு, டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட மாநாட்டை ஒட்டி அந்தியூரில் செம்படை பேரணி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஈரோடு மாவட்ட 13  ஆவது மாநாடு, அந்தியூரில் நவ.30, டிச.1 ஆகிய  தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டை தொடர்ந்து  இறுதியாக பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற் றது. தவுட்டுபாளையத்தில் அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர். முருகேசன் தலைமையில் தொடங் கிய பேரணி, சத்தி ரோடு, சிங்கார வீதி வழியாக  பொது கூட்ட திடலை அடடைந்தது. சேலம் அக்னி கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடங்கியது. கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன் மற்றும் எஸ்.வி.மாரிமுத்து ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில் திரளானோர் கலந்து கொண்ட னர்.