சேலம், அக்.13- சேலம் மாநகரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள் ளம், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த ததால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாநகராட்சி, 25 ஆவது வார் டுக்குட்பட்ட பள்ளப்பட்டி அருகே உள்ள கோரிப்பள்ளம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் அருகில் மாநகராட்சி கட் டுப்பாட்டில் உள்ள பள்ளப்பட்டி ஏரி உள் ளது. இதன் அருகிலுள்ள சாக்கடை கால் வாய் முறையாக பராமரிக்கப்பட வில்லை. இதனால் தற்போது பெய்த கனமழையால் இப்பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. சாலை யில் சாக்கடை நீரும், மழை நீரும் சேர்ந்து, குடியிருப்பு பகுதியை சூழ்ந் துள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக இப்பகுதியிலுள்ள சாக்கடை கால் வாய்களை முறையாக பராமரிக்க வேண் டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். பொதுமக்கள் சாலை மறியல் இதேபோன்று, 47 ஆவது வார்டுக் குட்பட்ட அம்பேத்கர் தெரு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மழைக்காலங்களில் இதே நிலை தொடரும் நிலையில், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி நிர் வாகமும் எந்த முன்னெச்சரிக்கை நடவ டிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ் சாட்டி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் வேல்முருகன் தலை மையில் காவல் துறையினர் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். அப்போது, முறையாக சாக்கடை கால்வாய்களை பராமரிக்கா ததால், மழைநீர் ஊருக்குள் புகுந்துள் ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.