districts

img

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் டிஆர்இயு சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை, நவ.16- ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் போட்டியிடும் டிஆர்இயு சங் கத்திற்கு வாக்களிக்கக்கோரி, கோவை யில் சிஐடியு தலைமையில் டிஆர்இயு சங்கத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பு இயக்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வரும் டிசம்பர் 4, 5 மற்றும் 6  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்தலில் போட்டியிடும் டிஆர் யுஇ சங்கம் வெற்றி பெற, கோவை  ரயில் நிலையம் மற்றும் பணிமனைக ளில் உள்ள ரயில்வே தொழிலாளர்களி டம் சிஐடியு தலைமையில் டிஆர்இயு அமைப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.   இதில், சிஐடியு மாவட்டத் தலை வர் கே.மனோகரன், செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர். வேலுச்சாமி, டிஆர்இயு பொதுச்செய லாளர் ஏ.ஜானகிராமன், செயல் தலை வர் எஸ்.சாம்பசிவன், டிவிஷன் தலை வர் திருப்பதி, உதவி பொதுச் செய லாளர் பிஜூ, சிவில் சப்ளை சங்க மாநி லப் பொருளாளர் எம்.ஏழுமலை, கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஆனந்தன் மற்றும் சிமென்ட் & பொது சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்தன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.