ஈரோடு, நவ. 17- ஈரோடு எலெக்ட்ரிக் ஷெட் தொழிலாளர் களின் அடிப்படை கோரிக்கைகளை வலியு றுத்தி புதனன்று பணிமனை முன்பு டிஆர்இயு - சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு வேலைப்பளுவை திணிக்காமல், கூடுதல் ஊழியர்களை நியமிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தை அளிக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தில் குற்றப் பத்திரிக்கை, தண்டனை கலாச்சாரத்தை கைவிட வேண்டும். தேவையான உதிரி பாகங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டிஆர்இயு நிர்வாகி சௌகத் அலிகான் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத் தார். இதில், கோட்ட தலைவர் எம்.முரு கேசன், செயலாளர் கே.அல்லிமுத்து உள் ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், கிளை செயலாளர் எஸ்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.