திருப்பூர், மே 12- திருப்பூர் ரயில்வே குடி யிருப்பில் புதர்மண்டி கிடப் பத்தால், பாம்புகள் நட மாட்டத்தால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள் ளனர். திருப்பூர் ரயில் நிலை யத்தின் முகப்பு பகுதியில் ரயில்வே ஊழியர்களுக் கான அடுக்குமாடி குடியி ருப்பு உள்ளது. இங்குள்ள 2 அடுக்குமாடி கட்டடங்களில் ஊழியர் கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு வளாகம் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் கட்டடத்தின் பின்பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இங்குள்ள குழாய்களில் கொடிகள் படர்ந்து இருப்ப தால் புதருக்குள் இருக்கும் பாம்புகள் இக் கொடி வழியாக வீட்டிற்குள் புகுந்து விடுவ தாக குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக் கின்றனர். பாம்புகளுக்கு பயந்து பெரும்பாலா னவர்கள் வீடுகளின் ஜன்னல்களை திறக் காமல் எப்போதும் மூடியபடியே வைத்துள் ளனர். மேலும் சிறுவர், சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயப்படு கின்றனர். இங்கு குடியிருப்பை சுற்றி புதர் மண்டி இருப்பதால் கொசுத் தொல்லை யாலும் அவதிப்படுகின்றனர். இதேபோல் கழிவு நீரும் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பராமரிப்பின்றி காணப்படும் இக்குடியிப்பு வளாகத்தில் அடிக்கடி பரா மரிப்பு பணியை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டுமென இங்கு வசிப் போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.