பென்னாகரம், ஜூன் 25- பென்னாகரம் அருகே வனப்பகுதியில் முயல் வேட் டையாடி சமைத்து சாப்பிட்ட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் விதம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. தருமபுரி மாவட்டம், பென் னாகரம் வன சரகத்திற்கு உட் பட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், மடம் செக்போஸ்ட் வனப் பகுதிகளில் வன அலுவலர் ராஜ்குமார், வனவர் முனுசாமி உள்ளிட்ட வனத்துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது நான்கு பேர் முயலை வேட்டை யாடி வனப்பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற வனத் துறையினர் முயல் கறி சமைத்து சாப்பிட்ட நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் வனத்துறையின் மேற்கொண்டு விசாரணை யில் இவர்கள் மடம் போஸ்டை சேர்ந்த மாறன் மகன் சின்னதுரை (24). பொம்பிடியை சேர்ந்த விஜயகுமார் (23), பிலிகுண்டுலுவை சேர்ந்த சேட்டு (25), நாட்றபாளையம் இளங் கோவன் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்த வனத்துறையினர் காட்டு விலங்குகளை வேட்டையாடிய குற்றத்திற் காக தலா ரூ.25 ஆயிரம் விதம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.