ஈரோடு, அக். 6- மார்க்சிஸ்ட் கட்சியின் பெருந்துறை தாலுகா 12 ஆவது மாநாட்டில், தாலுகா செயலாளராக ஆர்.அர்ஜூனன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா கமிட்டியின் 12 ஆவது மாநாடு பெருந்துறை பி.ராமமூர்த்தி நினைவ கத்தில், தோழர் சீதாராம் யெச்சூரி நினை வரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு, கே.குப்புசாமி, சி.பழ னிசாமி மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். கே.ரவி மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் ஏ.ஈஸ்வரன் வர வேற்றார். எம்.ராமசாமி அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தொடக்க உரையாற்றி னார். தாலுகாச் செயலாளர் பி.முத்து பழனிசாமி வேலை அறிக்கை சமர்ப்பித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன் வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், பெருந்துறை சிப் காட் கழிவு நீரினை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதைத் தடுத்து, பாதிக்கப் பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை சேர்க்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை 544ல் பெத் தாம்பாளையம் குறுக்குச் சாலை மற்றும் விஜயமங்களம் -வாய்ப்பாடி குறுக்குச்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநாட் டில், 9 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. செயலாளராக ஆர்.அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப் பட்டார். இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம் நிறைவுரை யாற்றினார். பி.கௌரிசங்கர் நன்றி கூறினார்.