திருப்பூர், நவ.13 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார் பில், இந்தாண்டு தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு நீர் மேலாண்மை என்று ஆய்வு தலைப்பு கொடுக்கப்பட் டிருக்கிறது. இதன் அடிப்படையில் காங் கேயம் வட்டம் நிலழி கவுண்டம்பா ளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாண வர்கள் குழு இதுகுறித்து ஆய்வ றிக்கை தயாரிக்கிறது. காங்கேயம் வட்டாரத்தில் “மூலிகை சாகுபடியும், நீர் மேலாண்மையும்”, என்ற தலைப்பில் தரணிஷ், காப்பிரி யோன் ஆகிய இருவர் கொண்ட மாண வர் குழு ஆய்வறிக்கை தயாரிக்கிறது. இந்த மாணவர்கள் தங்கள் ஆய்வு பணியை பள்ளிக்கு அருகில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் உள்ள உயிர் வேலிகளில் மூலிகை தாவரங்களை தேடி எடுத்து தங்கள் பள்ளியில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்கிறார்கள். இந்த அறிக்கையை தயாரிக்க வழி காட்டி ஆசிரியராக யோக ஆசிரியர் க. காளியப்பன் செயல்படுகிறார். அறிவி யல் ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் விவ சாயிகளின் துணை கொண்டு இந்த ஆய்வை மேற்கொள்வதாக மாணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண வர்கள் மேற்கொள்ளும் ஆய்வு இந்த வட்டாரத்தில் விவசாயத்தை மேம்ப டுத்த உதவி செய்யும் என்று நம்புவதாக வழிகாட்டி ஆசிரியர் காளியப்பன் தெரி வித்தார்.