districts

img

பேருந்து நிலையத்தில் நிற்காத பேருந்து பொதுமக்கள் போராட்டம்

பொள்ளாச்சி, பிப் .3- பேருந்து நிலையத்தில் நிற்காத தனியார் பேருந்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடுமலைபேட்டையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கோவை சென்ற தனியார் பேருந்தில், உடல்நிலை சரியில் லாத  தமது குழந்தைகளுடன் உடுமலையில் மருத்துவம னைக்கு சென்று வந்த கோமங்கலத்தை சேர்ந்த பெண்  ஏறியுள்ளார். அவர்,  கோமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்கு பயண சீட்டு கேட்டுள்ளார். அப்போது தனி யார் பேருந்து நடத்துனர் கோமங்கலம் புதுர் நிறுத்ததில் நிற்க  முடியாது எனகூறியதோடு, பொள்ளாச்சி வரை பயண சீட்டை  கொடுத்துள்ளார். மேலும், குறிப்பிட்ட பேருந்து நிறுத்த தில் நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.  கோமங்க லம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நிற்க வேண்டும் என அரசாணை இருந்தும்  குழந்தைகளுடன் பய னித்த பெண் வலியுறுத்தியும் நிற்காமல் சென்ற பேருந்து பற் றிய தகவல் கோமங்கலம் கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து, அப்பேருந்து மீண்டும் கோமங்கலம் வழி யாக உடுமலைபேட்டைக்கு சென்றபோது, கோமங்கலத்தில்  பேருந்தை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தக வல் அறிந்து வந்த காவல்துறையினர் குறிப்பிட்ட டிஎன்  78 ஒய்  2626 என்ற பேருந்தின் நடத்துனரிடம் விசாரித்தனர்.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோமங்கலம் கிளைச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கூறுகையில், கோமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் கோவையிலிருந்து பழனி வரை செல்லும் அனைத்து பேருந்துகளும் நிற்க வேண்டும் என அரசாணை உள்ளது. இதனை பெரும்பாலான தனியார் மற்றும் அரசு பேருந்து நடத்துனர்கள் மதிப்பதில்லை. இது போன்ற பொதுமக்களை பாதிக்கும் பிரச்சனைகளை பேருந்து நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்சனை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.