அவிநாசி, பிப்.17- அவிநாசி அருகே சேவூர் கைகாட்டி பகுதியில் மயானத்தை மீட்க வேண் டும் என கோரி தேவேந்தர் நகர் பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். சேவூர் ஊராட்சி, தேவேந்தர் நகரில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தாழ்த்தப்பட்ட சமு தாய மக்கள் பயன்படுத்தும் (க.சா.எண் 234) மயானம் சேவூர் கைகாட்டி பகுதி யில் உள்ளது. ஆனால் மயானத்தில் சேவூர் கைகாட்டி ரவுண்டான பகுதி யைச் சுற்றியுள்ள உணவகத்தினர், தேனீர் கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கழிவுகளை கொட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். ஆகவே உட னடியாக நடவடிக்கை எடுத்து மயா னத்தை மீட்கக்கோரி தேவேந்தர நகர் பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.