திருப்பூர், டிச.13- திருப்பூர் கருப்பகவுண்டம் பாளையத்தில் மின் மயானம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட நான்காவது மண்டலம் 54 ஆவது வார்டு கருப்பகவுண்டம் பாளையத்தில் 500க்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் மின் மயா னம் அமைக்க மாநகராட்சி மூலம் மண் பரிசோதனை நடைபெற்று உள்ளது. ஆனால் குடியிருப்பு அதிகம் உள்ள பகுதியில் மின் மயானம் அமைக்கும் பட்சத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும். குடி யிருப்பு பகுதிக்கு மத்தியில் அரசு பள்ளி, வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை இருப்பதால் அப்பகு தியில் மின் மயானம் அமைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் குறைதீர்க் கூட்டத்தில் மனு அளித் தனர்.
மின்வசதி கோரி
அதேபோல், திருப்பூர் அங்கா ளம்மன் நகர் பெருந்தொழுவு கிரா மத்தில் 80க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இத னிடையே இப்பகுதியில் மின் கம்பங்கள் நடப்படும் இடம் தங்க ளின் சொந்த இடம் என ஒரு சிலர் கூறியதால் மின் கம்பம் நடும் பணி நிறுத்தப்பட்டது. முதலமைச் சரின் தனி பிரிவிற்கு மனு அளிக்கப் பட்டு மாற்று வழியில் மின் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்த பிறகே 10 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டது. அதில் ஒரு சிலர் அவர்களின் சொந்த இடத் தில் அமைத்தனர். இதனிடையே தனியார் ஒருவர் எதிர்ப்பு தெரிவித் ததால் மின் இணைப்பு கிடைக் காமல் போனது. இதனால் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின் இணைப்பு இன்றி தவித்து வருவதாகவும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வா கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், பாதிக் கப்பட்டவர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.