தருமபுரி, ஏப்.13- இலக்கியம்பட்டி அருகே தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட் டது வெண்ணாம்பட்டி அசோக் நகர். இப்பகுதியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந் நிலையில், இப்பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.