திருப்பூர், ஜூன் 21- குழந்தைகள் மீதான வன்முறை களை தடுத்து நிறுத்த கோரி மாதர் சங்கம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட் டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவ தும் குழந்தைகள் மீதான வன்முறை களை தடுத்து நிறுத்த மக்கள் சந்திப்பு பிரச்சாரங்களை நடத்த முடிவு செய்தி ருந்தனர். அதன் அடிப்படையில் திருப் பூர் குமரன் சிலை முன்பு புதனன்று மக் கள் சந்திப்பு கூட்டம் நடத்தினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ரா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை கூட்டத்தில், மாநிலத் தலை வர் வாலண்டினா, மாநிலப் பொருளா ளர் பிரேமலா, மாவட்டச் செயலாளர் கே. சரஸ்வதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இந்த தெருமுனைக் கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் கவிதா, மாநிலக் குழு உறுப்பினர் பானுமதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சாவித்திரி, லட் சுமி, மைதிலி, செல்வி, வளர்மதி உட்பட பலர் பங்கேற்றனர்.