districts

img

பணி சூழலுக்கு ஒத்துவராத அறிக்கை பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி,‌ ஜூலை 31- பணி சூழலுக்கு ஒத்துவராத அறிக்கை கோரும் இயக்குனரை கண் டித்து  பொது சுகாதாரத்துறை அலுவ லர் சங்கத்தின் சார்பில் புதனன்று தரும புரியில் துணை இயக்குனர் மருத்து வப்பணிகள் அலுவலகம்  முன்பு  ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சுகாதாரத்துறை‌அலுவலர்களிடம் தேவையற்ற அறிக்கைகள் கோரு வதை கைவிடவேண்டும். அறிக்கைகள் வழங்க உரிய  கால அவகாசம் வழங்க வேண்டும். பணி சூழலுக்கு  ஒத்து வராத அறிக்கைகள் கோரும்  கூடுதல் இயக்குனர் (தொழுநோய்) அவர்க ளின் போக்கினை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டத் தலைவர் பி.சந்தி ரன் தலைமை ஏற்றார். இதில், மாநில துணைத்தலைவர் கே.சி.ஏ.தினேஷ், செயலாளர் மணிரத்தினம், கிருஷ்ண கிரி மாவட்டச் செயலாளர் கவியரசன், முன்னாள் மாவட்டத் தலைவர் கருப்ப சாமி, ஜாக்டோ ஜியோ மாவட்ட நிதி காப் பாளர் கே.புகழேந்தி உள்ளிட்டோர் உரையாற்றினர்.