நாமக்கல், டிச.21- பள்ளிபாளையம் பகுதி யில் அரசு மருத்துவம னைக்கு செல்லும் வழியில் தார்சாலை அமைக்க வேண் டும், என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ள னர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவரங் காடு பகுதியில் அரசு மருத் துவமனை செயல்பட்டு வரு கிறது. இங்கு ஆயிரக்கணக் கான பொதுமக்களும், ஏராள மான கர்ப்பிணிகளும் வந்து செல்கின்ற னர். இந்நிலையில், குடிநீர் குழாய் பணிகள் காரணமாக, ஆவரங்காடு பிரதான சாலை யில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜேசிபி இயந்திரத்தின் உதவி யுடன் சாலை அகற்றப்பட்டது. பல நாட்களாகி யும் முறையான தார்சாலை அமைக்கப்படாத நிலை இருப்பதால், அரசு மருத்துவம னைக்கு அவசர தேவையாக செல்லும் அவ சர உறுதி வாகனம் மற்றும் நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அருகிலேயே 2000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயி லும் அரசுப்பள்ளி இருக்கும் நிலையில், தினந்தோறும் மாணவிகள் கடும் அவதி யுடனே இந்த சாலையை கடந்து செல்கின்ற னர். எனவே, போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு தார்சாலை அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.