தருமபுரி, ஜன.18- அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை வலியுறுத்தி யுள்ளது. ஆதித்தமிழர் பேரவை சார்பில், சமூகநீதி காப்போம் மாவட்ட மாநாடு தருமபுரி தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. இதற்கு அமைப்பின் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் ரவிக்குமார் துவக்க உரையாற்றி னார். நிறுவன தலைவர் அதியமான் சிறப்புரையாற்றினார். திமுக மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி வாழ்த்தி பேசினார். இம்மாநாட்டில், ஆட்டுகாரம்பட்டி அருந்ததியர் மக்க ளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பயனா ளிகளுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும். அரூர் வட்டத்திற்குட்பட்ட கிரைப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி வட் டத்திற்குட்பட்ட இந்திரா நகர், பத்தி ரெட்டிஅள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள அருந்ததிய மக்களுக்கு குடிநீர், சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண் டும். பென்னாகரம் வட்டம், ஏரியூரில் உள்ள அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். கோவிலூரான் கொட்டாய் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு எடுக்கப்பட்ட இடத்திற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.