districts

img

மக்கள் சேமிப்பிற்கு கூடுதல் வட்டி வழங்கிடுக

கோவை, பிப்.14- மக்கள் சேமிப்பிற்கு கூடுதல் வட்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பில் பெருந்திரள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது. வங்கிகளில் தேவையான அளவு ஊழியர்களை நியமிக்கவும், பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25  தேதிகளில் நாடு தழுவிய வேலை  நிறுத்தப் போராட்டத்தை வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித் துள்ளது. இதன்தொடர்ச்சியாக கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே உள்ள முன்னோடி வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐபிஇஏ ஜெ.எம்.பாஷா தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய  வங்கி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.மகேஸ்வரன், ஏஐபிஇஏ ஏ. சையது இப்ராஹிம், நித்யா, என்சிபிஇ எஸ்.செந்தில்குமார், ஏஐபிஓசி எம்.முருகேசன்,  ஐஎன்பிஓசி தியாகராஜன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  முன்னதாக, தற்காலிக ஊழியர்க ளை பணி நிரந்தரப்படுத்திட வேண்டும். வாரத்தில் 5 நாள் வேலையை அமல்ப டுத்த வேண்டும். பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்து, மக்கள் சேமிப்புக்கு கூடுதல் வட்டி வழங்கிட வேண்டும். சேவைக்கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.