திருப்பூர், அக்.24- வெங்கமேடு ஆனந்தா அவென்யூ அருகில் சாக்கடை கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கி றது. முறையான சாக்கடை கழிவுநீர் கால் வாய் அமைக்காவிட்டால் போராட்டம் நடத் தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தட்டி வைத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 9 வார்டுக்கு உட் பட்ட வெங்கமேடு ஆனந்தா அவென்யூ அரு கில் சாக்கடை கழிவுநீர் சாலையில் குட்டை போல் தேங்கி இருந்தது. இதுகுறித்து மாந கராட்சிக்கு பல்வேறு முறை தகவல் தெரிவித் தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதைய டுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெங்கமேடு கிளைகள் சார்பில் சாலையில் சாக்கடை கழிவுநீர் குட்டை போல் தேங்கி நிற் கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட் டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு தட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து மாநக ராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் செல்வதற்கு குழி தோண்டி உள்ளனர். ஆனால், இது நிரந் தர தீர்வு அல்ல, மழை காலம் என்பதால் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து மேலும் சாலை யில் தான் தேங்கி நிற்கும். எனவே முறை யாக சாக்கடை கழிநீர் கால்வாய் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத் துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் தெரிவித்தனர்.