districts

img

மதுபான கடை திறக்க எதிர்ப்பு வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தருமபுரி, செப்.15- மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து கிராம மக்கள் பாலக்கோடு வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றி யத்துக்குட்பட்ட ஜெர்த்தலாவ்  ஊராட்சி, கூசி கொட்டாய் கிராமத்தில் 100க்கும்  மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்  பகுதியில் தனியாருக்கு சொந்தமான  இடத்தில் அரசு மதுபானக் கடை திறக்கப் படுவதாக பொது மக்களுக்கு வந்த  தகவலை அடுத்து கிராம மக்கள் சில  மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்,   டாஸ்மாக் நிர்வாக மேலாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.   தற்போது புதியதாக அரசு மதுபானக்  கடை அப்பகுதியில் திறக்கப்படும்  என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில், 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து பாலக்கோடு வட்டாட் சியரிடம் மனு அளிக்க வந்தனர். சுமார் 2 மணி  நேர காத்திருப்புக்குப் பிறகு வட்டாட்சியர்,   வருவாய் ஆய்வாளர் ஆகியோர் அலுவல கத்தில் இல்லாததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அலுவலகம் நுழைவா யிலில் முற்றுகையிட்டு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,   மதுபான கடை எங்கள் பகுதியில் திறக்கப் படும் பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத் தப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென் றனர்.

;