திருப்பூர், நவ.28- திருப்பூர், அனுப்பர்பாளையம் புதூர், பெரியார் காலனி யில் இயங்கி வரும் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட் டளை சார்பில், ஆண்டு தோறும் சாமிநாதபுரம் துவக்கப் பள்ளி, பெரியார் காலனி, அனுப்பாளையம் புதூர் நடுநி லைப் பள்ளிகள், அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, திருமுருகன்பூண்டி, பெரியாயிபாளையம் துவக்கப் பள்ளிகள், மற்றும் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளுக்கு வகுப்பு வாரியாக முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவ மாணவிக ளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். அதே போல் 400 மதிப்பெண் களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்ப டும். கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்க ளுக்கான ரொக்கப் பரிசு வழங்கும் விழா அம்மாபாளையம் நக ராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்வி ழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி அறிவியல் ஆசிரியை கவிதா வர வேற்றார். இதில், கடந்த கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக முதல் மூன்று இடம் பெற்ற வர்களுக்கும், 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் ருத்தரராஜ், தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் இளங்கோ, சங்கர், சென்னியப்பன் ஆகியோர் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான ரொக்க பரிசிகளை வழங்கினார் கள். முடிவில் ஆசிரியர் நித்திய லட்சுமி நன்றி கூறினார். இதனை தொடர்ந்து மற்ற 6 பள்ளிகளில் நடந்த விழாக்க ளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங் கப்பட்டது. இதன் மூலம் 7 பள்ளிகளில் நடந்த விழாவில் 610 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து8 ஆயிரத்து 200 மதிப்பி லான ரொக்க பணப்பரிசு வழங்கப்பட்டது.