1970 ஆம் ஆண்டுகளில் தமிழக விவசாயிகள் ஒரு பைசா மின் கட் டண உயர்வுக்கு எதிராகத் தொடர்ச் சியான போராட்டங்களில் ஈடுபட்ட னர். அப்போது உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் 1970 மே 9 இல் பல்லாயிரக்கணக்கான விவசாயி கள் மாட்டு வண்டிகளிலும், டிராக்டர் களிலும் கோவை நகரில் ஒரு பெரிய பேரணி நடத்தினர். இது “கட்டை வண்டிப் போராட்டம்” என்று அழைக்கப்பட்டது. விவசாயிகள் ஜூன் 15 ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19 இல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். ஆனால் அரசு ஒடுக்குமுறையை ஏவி மூன்று விவ சாயிகளின் உயிரைப் பறித்தது. இதன் விளைவாக, அரசு பணிந்தது. மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக் கப்பட்டது. ஆனால், அரசு மீண்டும் மின்சா ரக் கட்டணத்தை உயர்த்தியது. கோவை மாவட்ட விவசாயிகள் உழ வர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தலைமையில் மீண் ்டும் கிளர்ந்தெழுந்தனர். 12 அம்சக் கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்து நிறைவேற்றக் கோரி னார்கள். அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972 இல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் கோவை நகரை ஸ்தம் பித்தது. இந்தச் செய்தி அமெரிக் காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக் கையில் வெளியாகும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே காலகட்டத்தில் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 9 விவசாயி கள் கொல்லப்பட்டனர். போலீசா ரின் அடக்கு முறையில் மேலும் பல இடங்களில் விவசாயிகள் உயிரிழந் தனர். இந்தப் போராட்டத்தின் விளைவாக 1972 ஜூலை 19 இல் பேச்சுவார்த்தை மூலம் கட்டண உயர்வு பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட் டது. யூனிட் ஒன்றுக்கு மின் கட்டணத் திலிருந்து ஒரு பைசா குறைக்கப்பட் டது. நாராயணசாமி நாயுடு உள் ளிட்ட ஒப்பற்ற பெருந்தலைவர்க ளின் தியாகத்தால் இலவச மின் சாரம் விவசாயிகளுக்கு 1980 ஆம் ஆண்டுகளில் உறுதி செய்யப்பட் டது. விவசாய விரோத பாஜக அரசு ஆனால், தற்போது ஒன்றிய அரசு, விவசாயிகள் போராடிப் பெற்ற இலவச மின்சாரத்துக்கு மீட் டர் பொருத்துதல் உள்ளிட்ட பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மின்சாரத் துறையை தனி யார் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்யிகவே, உபி, ஹரி யானா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மின்துறை படிப்படி யாக தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள், தொழி லாளர்கள் ஒன்றினைந்து போராடி வருகின்றனர். அதேபோல, விவசா யத்தை கார்ப்ரேட் மயமாக்கும் நடவடிக்கையில், ஒன்றிய பாஜக தலைமையிலான அரசு மேற் கொண்டு வருகிறது. அண்மை யில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், விவசாயிகள் முழுமை யாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கடன் தள்ளுபடி, உர மானியம் குறைப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்க னவே தலைநகர் டில்லியில் மோடி அரசின் மூன்று வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் திரண்டு நடத்திய போராட்டத்தின் காரணமாக அச்சட்டங்களை மோடி அரசு திரும்பப்பெற்றது. ஆனால், அதனையே தற்போது குறுக்கு வழி யில் செயல்படுத்த முனைகிற சூழ்ச்சியை மோடி அரசு மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், களத்தில் விவசாயிகளை ஒன்று திரட்டி, போராட்டம் நடத்தி, அதில் வெற்றி யும் பெற்று, உலகின் கவனத்தை ஈர்த்த நாராயணசாமி நாயுடு பிறந்த நாளில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம் வெற்றி பெறுவோம். இன்று நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு பிறந்த நாள் - கார்த்திக் மதிவாணன்