வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு
கோவை, பிப்.28- ஒன்றிய அரசை கண்டித்து, கோவையில் வழக்கறிஞர்கள் ஒரு நாள் அடையாள உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டுவர இருக்கும் வழக்கறிஞர் சட்ட திருத்த வரைவு மசோதா விற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள் ளது. இதனையடுத்து இந்த மசோதாவை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நி லையில் முழுமையாக இந்த வரைவு மசோ தாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங் கிணைப்பாளர் நந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளை ஏமாற்றும் தனியார் சர்க்கரை ஆலை
ஈரோடு, பிப்.28- விவசாயிகளை ஏமாற் றும், பண்ணாரி அம்மன் சர்க் கரை ஆலை மீது சட்டப்படி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் குறைதீர் கூட்டத்தில் முறையிட்டனர். ஈரோடு மாவட்ட விவசா யிகள் குறைதீர் கூட்டம், ஆட் சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசுகையில், தனியார் சர்க்கரை ஆலை கள் கரும்பு கட்டுப்பாட்டு சட் டப்படி லாபத்தில் விவசாயி களுக்கு பங்கு வழங்க வேண் டும். இதுகுறித்து நீதிமன்றத் தில் முறையிட்டதில், சட்டப் படி பங்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித் தது. ஆனால் 3 மாதங்கள் கடந்த பின்னரும், விவசாயி களுக்கு வழங்க வேண்டிய ரூ.14 கோடியை தராமல் காலதாமதம் செய்து வருகி றது. எனவே ஆலை நிர்வா கத்தின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, விவசா யிகளுக்கு சேர வேண்டி யதை காலதாமதமான காலத் திற்கு வட்டியுடன் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத் தினார்.
தண்ணீர் திறப்பு
தருமபுரி, பிப்.28- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணையில் இருந்து பாச னத்திற்காக புதனன்று தண் ணீர் திறக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு அணையிலி ருந்து பாசனத்திற்கான புத னன்று மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தண்ணீரை திறந்து வைத்தார். வாணியாறு அணை யிலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு வாணியாறு நீர்த்தேக்கத் திட்ட வரைவு விதிகளின்படி, வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்கள் வழியாக மே மாதம் வரையி லும் 65 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனால் வெங்கடசமுத்தி ரம், ஆலாபுரம், அலமேலு புரம், தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி புதூர், கோழி மேக்கனூர், பாப்பிரெட்டிப் பட்டி, அதிகாரப்பட்டி, கவுண் டம்பட்டி, எச்.புதுப்பட்டி, தேவ ராஜபாளையம், மெணசி, பூதநத்தம், ஜம்மனஹள்ளி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங் கள் பாசன வசதியை பெறும். முன்னதாக, இந்நிகழ்ச்சி யில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
நகர்மன்றக் கூட்டத்திற்கு அதிரடிப்படை எதற்கு? திருமுருகன்பூண்டி நகர்மன்ற உறுப்பினர் ஆவேசம்
அவிநாசி, பிப்.28 – திருமுருகன் பூண்டி நகர்மன்றக் கூட் டத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்வ தற்கு காவல் துறை அதிரடிப்படையை கொண்டு வந்து நிறுத்தியது ஏன்? இது அவமானகரமான செயல் என்று நகர் மன்ற உறுப்பினர் கூறினார். திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டம் வெள்ளியன்று காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்றது. அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டதற்கு நகர் மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரி வித்தனர். திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட் டம் நகர்மன்ற தலைவர் குமார் தலை மையில், துணைத்தலைவர் ராஜேஸ் வரி, ஆணையர் (பொறுப்பு) பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் திமுகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் பாரதி பேசுகை யில், நகர்மன்றக் கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை மற்றும் அதிரடிப்படை குவித்தது அவமானகரமான செயல். கவுன்சிலர்கள் இடையே கருத்து பரி மாற்றம் நடைபெறுவது வழக்கம். அதில் குரலை உயர்த்தி பரிமாறிக் கொள்வோமே தவிர, வேறு எந்தவித மான நடவடிக்கையும் இதுவரை நடந் ததில்லை. இதுபோன்ற நடவடிக் கைகளைத் தவிர்க்க வேண்டும். குப்பை அள்ளும் பணியாளர்களை, கண்கா ணிக்க ஐந்து கண்காணிப்பாளர்கள் இருக்கின்றனர், வேலை செய்வ தில்லை, பத்திரிகையாளர்களுக்கு, அமர்வதற்கு இருக்கை ஏற்பாடு செய்ய வேண்டும், போதிய இருக்கை இல்லா மல் நின்று கொண்டு செய்தி சேகரிக்க வேண்டிய நிலை உள்ளது என்றார். இதற்கு பதில் அளித்த ஆணையர், காவல்துறையை நாங்கள் அழைக்க வில்லை என்றார். இதுகுறித்து காவல்து றையினரிடம் கேட்டபோது நகராட்சி ஆணையர் 26 ஆம் தேதி கூட்டம் நடத்து வதற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித் தார். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பிர மணியம் பேசுகையில், 10ஆவது வார் டுக்கு உட்பட்ட, மயானம் சுத்தம் செய் யப்பட்டு, காம்பவுண்ட் சுவர் அமைத்து தர வேண்டும், 9,10,22,23 உள்ளிட்ட வார் டுகளில் தண்ணீர் கிடைக்கவில்லை, இந்தப் பகுதிகளுக்கு தண்ணீரை பம் பிங் செய்து வாரம் ஒரு முறையாவது வழங்க வேண்டும், 22 ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜீவா வீதியில் சாலை அமைக் கப்படாமல் உள்ளது. உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு வேலை பிரி வினை செய்ய வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சி லர் தேவராஜன் அளித்த மனுவில், 14 ஆவது வார்டு பகுதியில் வசித்து வரும் வாக்காளர்களை, வெவ்வேறு வார்டு பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். அவர்களை 14வது வார்டு பகுதியிலேயே மீண்டும் இணைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருக் கிறார். இதனைத் தொடர்ந்து திமுக, சிபிஐ அமைப்பைச் சேர்ந்த நகர்மன்ற உறுப் பினர் முருகசாமி, தங்கவேல் பேசுகை யில் தற்பொழுது மூன்று மாதம் முடிந்த பிறகு தான் நகர்மன்ற கூட்டம் நடை பெற்றுள்ளது. இதனை மாதந்தோறும் ஒரு முறை நடத்த வேண்டும் என கூறி னார்.
தென்னையைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கை என்ன? குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் விவசாயிகள் கேள்வி
திருப்பூர், பிப். 28- வெள்ளை ஈ தாக்குதலில் திருப்பூர் மாவட்டத்தில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், தென்னையைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது, என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் கேள்வி எழுப்பினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன் கூறியதாவது, கடந்த கூட் டத்தில் அளித்த மனுவிற்கான பதில் கள் வரவில்லை. தென்னை மரங்கள் வெள்ளை ஈ தாக்குதலுக்குள்ளாகி பல ஆயிரம் ரூபாய் விவசாயிக ளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒன் றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரி யம் இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இந்தியா முழுவ தும் உள்ள இப்பிரச்சனையை சரி செய்ய என்ன ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது என்று தெரிய வில்லை. வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ஒன்றிய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையும் இணைந்து உரிய ஆராய்ச்சி மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். 4 வயது முதல் 15 வயது உள்ள தென்னை மரங்க ளுக்கு ரூ.2.25 விவசாயியும், ரூ4.50 அரசு பங்களிப்பும் சேர்த்து ஒரு மரத் திற்கு ரூ.6.25 தனியார் நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் கட்டினால் இழப்பீடு ரூ.900 கிடைக்கும். அதேபோல் 15 வய துக்கு மேல் உள்ள மரங்களுக்கு ரூ.3.50 விவசாயியும், அரசு ரூ.7ம் செலுத்தினால் மரம் பட்டுப்போன தென்றால் இழப்பீடு ரூ.1750 கிடைக் கும் என்று கூறுகிறார்கள். இன்சூ ரன்ஸ் செலுத்தினால் அதற்கான ரசீது தரவில்லை. தனியார் இன்சூரன்ஸ் மீது நம்பிக்கை இல்லை. உடுமலை மேற்கு தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில் அரசு நிலங்கள் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள், வனவி லங்குகள் மோதல் அதிகரித்து வருகி றது. இதை தடுக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டபடி ஆக்கிரமிப் புகளை வனத்துறை முழுமையாக அகற்ற வேண்டும்.திருமூர்த்தி அணை நீர் தேங்கும் பகுதியாக உள்ள க.ச. எண் 374 உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். குறிப் பாக வருவாய்த் துறையினர் நில அளவை செய்யும்போது தளி கிராமம் க.ச.எண் 373 க்கு மேற்கு பக்கத்தில் வன நிலம் ஒரு ஏக்கர் 80 சென்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அந்த நிலத்தைச் சுற்றி முள் கம்பி வேலி அமைத்து தென்னை மரங்கள் வைத்து ஆண் டுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் சம்பாதித்து வருபவர் மீது வனச் சட்டப்படியான எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. உடு மலை மூணாறு சாலையை ஒட்டி சின் னாறு பகுதியில் ஒருவர் நீச்சல் குளத் துடன் கூடிய சொகுசு விடுதி கட்டியுள் ளார். அதேபோல் மாவடப்பு, குழிப் பட்டி, குறுமலை, ஈசல்திட்டு, தளிஞ்சி மலைவாழ் குடியிருப்புகளுக்கு செல் லும் பாரம்பரியமான பாதைகளில் ஒட்டியுள்ள சீமை கருவேல மரங் களை முழுமையாக அகற்ற வேண் டும். மலைவாழ் மக்கள் கிராமங்க ளுக்கு தமிழ்நாட்டில் மற்ற பகுதிக ளில் உள்ளதைப்போல, அருகாமை கேரள மாநில மலைப்பகுதிகளில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை போல் இங்கும் செய்ய வேண்டும். 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி மலைவாழ் மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க பாதை வசதி, குடிநீர், கல்வி, சுகாதாரம், மின் வசதி, வீட்டுமனைப்பட்டா ஆகிய வற்றை நிறைவேற்றிட சட்டம் அமல்ப டுத்தப்பட்டு 16 ஆண்டுகளாக மக்கள் போராடிக் கொண்டே உள்ளனர். விரைவாக நம் பகுதி மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவை களை நிறைவேற்றித்தர வேண்டும் என்றார். விவசாயிகள் சங்க மடத்துக்கு ளம் தாலுகா செயலாளர்எம்.எம். வீரப்பன், அமராவதி அணை பகுதி யில் நெற்பயிர் கருகிய இழப்பை சமா ளிக்க மார்ச் இறுதி வரை தண்ணீர் விட கோரிக்கை வைத்தோம். இதை ஏற்று மார்ச் இறுதி வரை தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டதற்கு நன்றி. அதேபோல் அமராவதி அணையில் ஷட்டர் பழுது ஏற்பட்டது. வரும் கோடை காலத்திற்குள் அதை சரி செய்யாவிட்டால் கடும் இழப்பை சந்திக்க நேரிடும். எனவே உடனடி யாக அதை சரி செய்ய வேண்டும் என் றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க எஸ்.அப்புசாமி கூறுகையில், மேட்டு பாளையம் 4 ஆவது குடிநீர் திட்டத் தில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் இணைக்கப்பட்ட சொக்கனூர் ஊராட்சியை சேர்ந்த கல்லாங்காடு, தெக்காலதோட்டம் குட்டை ஆலாங் காடு குட்டை, ஈட்டிவீரம்பாளையம் முடியங்கிணறு உள்ளிட்ட பகுதிக ளில் சோலார் மின் தகடுகள், ஓஎம் எஸ் கருவிகள் பொருத்தப்பட்டும் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதேபோல் பொங்குபாளையம் ஊராட்சி இன்னும் இணைக்கப்படா மல் உள்ளது. இதன் மீது உரிய கவ னம் செலுத்தி விவசாயிகளின் வாழ் வாதாரத்தை காக்க வேண்டும், என் றார்.