districts

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள்: திருப்பூர் மாவட்டத்தில் தேர்வுக்குழு முன் தயாரிப்புகள்

திருப்பூர், பிப். 22 - பிளஸ் 1, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு கள் மார்ச் மாதமும், எஸ்எஸ்எல்சி பொதுத்  தேர்வுகள் ஏப்ரல் மாதமும் தொடங்க உள்ள  நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் அதற் கான ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட தேர் வுக்குழு முன் தயாரிப்பு ஆலோசனைக் கூட் டம் செவ்வாயன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தேர்வுக்குழு கூட் டம் ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு  (பிளஸ் 2) பொதுத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி  முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையிலும், மேல் நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி  வரையிலும், பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி)  பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல்  ஏப்ரல் 20ஆம் தேதி முடிய நடைபெற வுள்ளது.

பொதுத் தேர்வு எழுதுவோர்


பிளஸ் 1 பொதுத் தேர்வை திருப்பூர் வரு வாய் மாவட்டத்தில் 92 தேர்வு மையங்களில், 217 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 556 மாணவ, மாணவிகள், 214  தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயி ரத்து 770 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வை 92 தேர்வு மையங்களில் 213  மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 25 ஆயி ரத்து 664 மாணவ, மாணவிகள், 496 தனித்  தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160  பேர் எழுத உள்ளனர். மேலும் பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வை 106 தேர்வு மையங்களில் 354  பள்ளிகளில் பயிலும் 30 ஆயிரத்து 687  மாணவ, மாணவிகள், 1484 தனித்தேர்வர் கள் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர்  எழுத உள்ளனர்.

வினாத்தாள் பாதுகாப்பு மையம்

இந்த அரசுப் பொதுத் தேர்வுகளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் ஆறு இடங்களில் வினாத்தாள்கட்டு காப்பு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் ஆயு தம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பில் பராம ரிக்கப்படுகிறது. மேல்நிலை பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண் காணிப்பாளர்களாக 92 தலைமை ஆசிரியர் களும், 92 துறை அலுவலர்களும், அறைக்  கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,608  ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ள னர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங் களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப் பாளர்களாக 106 தலைமை ஆசிரியர்களும், 106 துறை அலுவலர்களும், அறைக் கண் காணிப்பாளர்களாகப் பணியாற்ற 1,780 ஆசி ரியர்களும் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

பறக்கும் படைகள்

தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல் களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்கா ணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையி லும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக் கப்படுகிறது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வை யிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடு வோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள் வர். மேல்நிலை பொதுத் தேர்விற்காக முதன் மைக் கல்வி அலுவலர் மூலமாக 157 ஆசிரியர் களைக் கொண்ட பறக்கும் படை அமைக்கப் படவுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர் விற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூல மாக 178 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும்  படை அமைக்கப்பட உள்ளது. இணை இயக் குநர் தலைமையிலும் பறக்கும் படை அமைக் கப்பட உள்ளது. தேர்வு மையங்களில் தேர்வு களைப் பார்வையிடும் அதிகாரிகள், பறக் கும் படையினர் தங்கள் குறிப்புகளை, ஆலோ சனைகளைப் பதிவு செய்ய பதிவேடு ஒன்று  வைக்கப்படும்.  ஒவ்வொரு தேர்வு மையத்தி லும் புகார் மற்றும் ஆலோசனை பெட்டியும் வைக்கப்படும்.

பஸ் பாஸ் இல்லாவிட்டாலும் அனுமதி

மேல்நிலைப் பொதுத் தேர்வு நடைபெறும்  நாட்களில் அரசுப் பேருந்தில் பயணம் செய் யும் மாணவ, மாணவியர் இலவச பேருந்து அடையாள அட்டையை தம்முடன் எடுத்து வராவிட்டாலும், சீருடை அணிந்து வரும் மாணவ, மாணவியரை பேருந்தில் பயணம்  செய்ய பேருந்து நடத்துநர்கள் அனுமதிக்க,  அரசுப் போக்குவரத்துக் கழக திருப்பூர் கோட்ட மேலாளரிடம் கேட்டுக் கொள்ளப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது. தனித் தேர்வு மையங்களுக்கு தேர் வெழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கூடு தல் பாதுகாப்பு அளிக்க காவல் துறையைக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள்  ஆழ்ந்த கவனம், மிகுந்த முன்னெச்சரிக்கையு டன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு நேரங்களில் மன அமை தியுடனும், தைரியத்துடனும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் சிறப்பாக தேர்வு களை எழுத மாவட்ட தேர்வுக் குழு சார் பில் மாவட்டஆட்சியர் வினீத் அறிவுரை வழங் கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய்,  திருப் பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரி யப்பனவர் உள்பட கோட்டாட்சியர்கள், மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.