திருப்பூர், ஜன. 6 – திருப்பூர் மாநகர காவல் ஆணையராக சேலம் சரக டிஐஜியாக பணியாற்றி வந்த பிர வீன்குமார் அபிநபு வெள்ளியன்று பொறுப் பேற்றுக் கொண்டார். மாநகர காவல் ஆணையர் அலுவலகத் தில் பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தி யாளர்களிடம் பேசிய ஆணையர் பிரவீன்குமார் அபிநபு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மாநக ரில் போக்குவரத்து நெரிசலை விரைவில் சரிசெய்ய நட வடிக்கை எடுக்கப்படும், என்றார். தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் அபிநபு பி.டெக் முடித்தவர். பின்னர் வருமான வரி துறை உயர் படிப்பான ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்றார். 2005ஆம் ஆண்டு ஐபிஎஸ் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு காவல் அதிகாரியாக பதவி ஏற்று விருத்தாசலம், முத்துப்பேட்டை, திருப்பரங்குன்றம் துணைக் கோட்டங்களின் உதவி காவல் கண்காணிப்பாள ராகவும், திருவாரூர், கரூர், தேனி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளராகவும், சிபிசிஐடி காவல் கண்காணிப்பாள ராகவும் பணியாற்றி இருக்கிறார். திருநெல்வேலி மற்றும் சேலம் சரக டிஐஜியாகவும் இருந்திருக்கிறார். சிறப்பான பணி செய்ததற்காக, 2018ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றிருக்கிறார்.