அவிநாசி, டிச.18- நூல் விலை உயர்விற்கு எதிராக விசைத் தறி, கைத்தறி, ஆயத்த ஆடை, பனியன் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலா ளர்கள், உரிமையாளர்கள் என அனை வரும் ஒன்றுபட்டு பெரும் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும் என விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன அறை கூவல் விடுத்துள்ளது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் மாநில சம்மேளன (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம் சனியன்று அவிநாசியில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநி லத் தலைவர் பி.முத்துசாமி, மாநில பொதுச் செயலாளர் எம்.சந்திரன், பொருளாளர் எம். அசோகன், சிஐடியு மாநில செயலாளர் கே.சி.கோபிக்குமார் உள்ளிட்ட நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு: நூல் விலை உயர்வு கடந்த இரண்டு மாதங்களில் மிகப்பெரிய பாதிப்பை உரு வாக்கி உள்ளது. இதன் காரணமாக உரிமை யாளர்கள், தொழிலாளர்கள், சார்பு தொழில் கள் என சுமார் 15 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருப் பூர், ஈரோடு, நாமக்கல், ராஜபாளையம், ஆண்டிப்பட்டி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் வேலை நிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன்பின் கிலோவுக்கு 50 ரூபாய் வரை உயர்த்திவிட்டு, 10 ரூபாய் குறைப்பது என் பது எந்த வகையிலும் பலனளிக்காது. ஆகவே, விலையை முழுமையாக குறைக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி விசைத்தறி, கைத்தறி, ஆயத்த ஆடை, பனி யன் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலா ளர்கள், உரிமையாளர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு பெரும் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.
தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு
மேலும், திருப்பூர் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 2014 ஆண்டு முதல் ஊதிய உயர்வு இல்லாமல் பணிபுரிந்து வரு கிறார்கள். தற்போது தறி உரிமையாளர் களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக் கும் இடையில் கூலி உயர்வு உடன்பாடு எட் டப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட உயர் வில் தொழிலாளர்களுக்கு எதுவும் கிடைக்க வில்லை. ஆகவே, தொழிலாளர்கள் சங் கங்களுடன் பேசாமல் உடன்பாடு செய்தது கண்டனத்துக்குரியது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், மாநில அள வில் ஆதரவு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பிப்.23,24 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்
மேலும், விசைத்தறி தொழிலுக்கு ஏரா ளமான நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலை யில், விசைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி 12 சதவிகிதம் உயர்த்து என்கிற முடிவை ஒன் றிய அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு ஜவுளித் துறையின் மூலம் வழங்கி வந்த காப்பீட்டு திட்டம் மீண்டும் செயல்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும். பண மயமாக்கல் திட் டத்தை திரும்பப் பெற வேண்டும். பெட் ரோல் டீசல், சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகைளை முன்வைத்து மோடி அரசை கண்டித்து வருகின்ற பிப்ரவரி 23, 24 தேதி களில் நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் வெற்றியடைய செய் வோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.