சேலம், செப்.15- தேங்கல்வாரை பகுதி யில் செயல்படும் அரசு நடு நிலைப்பள்ளியில் மதிய உணவு சுகாதாரமற்ற தாகவும், தரமானதாகவும் இல்லை என புகார் தெரி வித்து மாணவர்கள், பெற் றோர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த தேங்கல்வாரை பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு சுகாதாரமற்றதாகவும், தர மானதாகவும் இல்லை புகார் தெரிவித்து, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, பிரச்சனை சரிசெய்ய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். தமிழக முதல்வர் காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்த வியாழனன்று, அரசு பள்ளியில் சுகாதாரமற்ற உணவு வழங் கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இது அதிகாரிகளின் அலட் சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந் துள்ளது.