districts

img

மாசு இல்லாத தீபாவளி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு

திருப்பூர், அக்.23 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 மற்றும் திருப்பூர் மாவட்ட மாசு கட்டுப் பாடு வாரியம் இணைந்து திருப்பூர் ரயில் நிலையத்தில் மாசு இல்லாத் தீபாவளி விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.  நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங் கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக துணை வணிக மேலாளர் சங்கர் கலந்து கொண்டு சிறப்பு ரையாற்றினார். அவர் கூறுகையில், தமிழ் நாடு அரசு தீபாவளி பண்டிகையன்று காலை  6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8  மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது, பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம்  பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மாசி னால் சிறுகுழந்தைகள், வயதான பெரி யோர்கள் மற்றும் நோய் வாய்பட்டுள்ள வயோ திகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆகை யால் அதிக சப்தம் எழுப்பும் வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று பேசினார்.  சேலம் கோட்ட ரயில் பயணி ஆலோசகர் குழு உறுப்பினர் சுரேஷ்குமார், முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் ஆகி யோர் கலந்து கொண்டு, விபத்தில்லா மற்றும்  பசுமையான தீபாவளியை கொண்டாடு வோம் என்று வாழ்த்துரை வழங்கினர்.

இந் நிகழ்வில் மாணவ செயலர்கள் சுந்தரம், பூபதி  ராஜா, பூபாலன் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரயில் நிலை யத்தில் இருக்கும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதா கைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.  கோவை  தீபாவளி பண்டிகையை விபத்து, மாசு  மற்றும் ஒலி இல்லாத பண்டிகையாக கொண்டாட வேண்டும் என கோவை மாவட்ட  ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், மாசு இல்லா  சுற்றுச்சூழலை பேணி  காப்பது நமது கடமை. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுப் படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.  திறந்த வெளிகள் மற்றும் பொது இடங் களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க அப் பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். தொடர்ந்து வெடிக்கும் சர வெடிகளை தவிர்க்கவும்.  குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடத்தில் வெடிகளை வெடிப்பதை தவிர்க்க  வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.