திருப்பூர், அக். 24 - அவிநாசியில் போலியோ ஒழிப்பு தினப்பேரணி நடை பெற்றது. அவிநாசி கிழக்கு ரோட்டரி, மெட்டல் டவுன் ரோட்டரி, அவிநாசி ரோட்டரி, சேவூர் ரோட்டரி, திருப்பூர் ரோட்டரி, மெரி டியன் ரோட்டரி, அவிநாசி கிழக்கு ரோட்ராக்ட் இணைந்து உலக போலியோ ஒழிப்பு தினம் பேரணி நடத்தினர். அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பாக வியாழக்கிழமை இப்பேர ணியை மாவட்ட ஆளுநர் டாக்டர் சுரேஷ் பாபு தொடங்கி வைத் தார். இதில் சிறப்பு விருந்தினராக கே.பூபதி, மாவட்ட பொது செயலாளர் வழக்கறிஞர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி அவிநாசி கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாகச் சென்று மீண்டும் அவிநாசி புதிய பேருந்து நிலை யத்தில் நிறைவடைந்தது.