சேலம், ஜன.5- சேலத்தில் அடித்து கொல்லப் பட்ட இளைஞருக்கு நீதிகேட்டு உடலை வாங்க மறுத்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வந்தது. இதனிடையே குற்ற மிழைத்தவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் வாலிபர் உடலை பெற்று கொண்டனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சேலம் மாவட்டம், செங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், உயிரிழந்த இளைஞ ருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யிலிருந்து ஸ்ரீதரின் உடலை வாங்கா மல் 5 ஆவது நாளாக வியாழனன்று தொடர் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து இப்பிரச்சனை சம்பந் தமாக காவல் துறை உயரிதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஸ்ரீதர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய காவல் துறையினர் ஒப்புக்கொண்டனர். இதனைத்தொ டர்ந்து ஸ்ரீதர் உடலை பெற்றுக் கொள்ள குடும்பத்தினரும் உறவினர் களும் சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம் பாதிக்கப்பட்ட குடும் பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் பாது காப்பு வழங்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள் ளது. முன்னதாக நடைபெற்ற நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண் முகராஜா, ஓமலூர் தாலுகா செயலா ளர் என்.ஈஸ்வரன், ஐஓசி சேகர் மற் றும் பாதிக்கப்பட்ட ஸ்ரீதரின் உறவினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண் டனர்.