கோயம்புத்தூர், அக். 1- உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளவர்களிடம் அக்டோபர் 1 செவ்வாயன்று அதி காரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் எஸ்.காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட் கொணர்வு வழக்கில், “தனது 2 மகள்கள் கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக் கொள்ள சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். எனது மகள்கள் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தெரிய வருகிறது. ஈஷா யோக மையம் நடத்தும் ஜக்கி வாசுதேவிற்கும் ஒரு மகள் இருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்க அவர் அனுமதி தந்து உள்ளார். ஆனால் எனது மகள் களை, யோகா என்ற பெயரில் மயக்கி, அவர்களை வெளியே அனுப்பாமல் துன்புறுத்தி வருவதாக சந்தேகிக்கி றோம். எனவே, இரு மகள்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் ஆகியோர் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரது மகள்கள் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். பெற்றோர்கள் தங்களை கேவலப்படுத்துவதாக மகள்கள் தெரி வித்த போது, அதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, “நீங்கள் துறவிகளாக மாறிய பிறகு அதை ஏன் பொருட் படுத்தப்போகிறார்கள். ஈஷா யோகா நிறுவனர் தனது மகளுக்கு திருமணம் செய்து விட்டு இவர்களை சன்னியாசி களாக மாற்றுவது ஏன்?. நீதிமன்றம் யாருக்கும் எதிராகவும் இல்லை, ஆதர வாகவும் இல்லை. ஆனால், இது குறித்து பல சந்தேகங்கள் உள்ளதாக” குறிப்பிட்டனர். எனவே, ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவ ரத்தை வரும் 4 ம் தேதி காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை யன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக் கான காவல் துறையினர், ஈஷா யோகா மையத்திற்குள் சென்றனர். பின்னர், ஒவ்வொரு பெண்களிடமும் தனித்தனி யாக விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஈஷா மையத்தில் இதுவரை எத்தனை பேர் தங்கியிருந்தனர், அவர்களில் எத்தனை பெண்கள் துற வறம் பூண்டுள்ளனர்? ஈஷா வந்த பிறகு காணாமல் போனவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட கேள்விகள் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நூற்றுக்கும் மேற்பட் டோர் இந்த ஈஷா மையத்தில் தங்கி உள்ளனர். இவர்களிடம் தனித்தனியாக விசாரிக்க வேண்டும் என்பதால், புதன்கிழமை மாலை வரையில் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.
எத்தனை வழக்குகள்?
கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவை யில் உள்ளன என்பது குறித்த அறிக்கை யை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.