அவிநாசி, செப். 15 – அவிநாசி பேரூராட்சி, திருமுருகன் பூண்டி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க் கின்றனர். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணும், கோவையைச் சேர்ந்த ரகு என்ற இளைஞரும் பிளக்ஸ் பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலை யில் பிளக்ஸ் பேனர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கி பிளக்ஸ் பேனர் வைப்ப தற்கு கட்டுப்பாடு விதித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே, அவிநாசி, பகுதி களில் அனுமதியின்றி சாலையோரங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை அகற் றும் பணியில் காவல் துறை ஈடுபட்டது. மட்டு மின்றி. பிளக்ஸ் பேனர் மீண்டும் வைக்கப்பட் டால் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத் தனர். இந்நிலையில், சமீப நாட்களாக அவி நாசி பேரூராட்சி, திருமுருகன்பூண்டி நக ராட்சி பகுதிகளில் திருவிழா மற்றும் கட்சி நிகழ்வுகளில் அதிக அளவுக்கு பிளக்ஸ் பேனர் வைக்க தொடங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் திருப்பூர் வரு கையை ஒட்டி அவிநாசி பைபாஸ் சாலை முதல் திருமுருகன்பூண்டி வரை மிகப் பெரிய பிளக்ஸ் பேனர்கள் சாலையோரமாக வைக் கப்பட்டுள்ளது. பலமான காற்று வீசினால் இந்த பேனர்கள் வாகன ஓட்டிகள் மேலே விழுந்து உயிர் சேதம் ஏற்படும் ஆபத்தும் உள் ளது. அதுவும் கடந்த சில நாட்களாக பலமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இது பற்றி சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் கூறுகையில், பலர் பெரிய அளவில் பிளக்ஸ் பேனர் வைக்கத் தொடங்கி விட்டனர். உயிர் சேதம்கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர் காலத்தில் பிளக்ஸ் பேனர் வைப்பதில் மீண்டும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினர்.