அவிநாசி,செப்.10 – அவிநாசி அருகே கோவையி லிருந்து திருப்பூர் செல்லும் சாலை யில் பிளக்ஸ் பேனர் முறிந்து, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் ரகு என்ற இளைஞரும், சென்னை பள்ளிக்கர ணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் ணும் சாலையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் விழுந்து உயிரி ழந்தனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பிளக்ஸ் பேனர் தொடர் பாக சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பல்வேறு அறிவு ரைகள் வழங்கி கட்டுப்பாடு விதித் தது. இதனைத் தொடர்ந்து அவிநாசி பகுதிகளில் காவல்துறை அனுமதி யின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட் டால் கடும் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத் தது. இந்நிலையில் அவிநாசியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன் னிட்டு இந்து முன்னணி, அமைப்பி னர் மிகப்பெரிய பிளக்ஸ் பேனர் களை சாலை முழுவதும் வைத்தி ருந்தனர், அவிநாசி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை திங்கட்கிழமை குளங்களில் கரைக்கப்பட்டது. ஆனால் இந்து முன்னணி அமைப் பின் சார்பில் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் கள் அவிழ்க்கப்படாமல், முறிந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. அது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உரிய அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை வைத்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள் ளனர். அதேபோல அவிநாசி சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் வைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அவி நாசி நகர் பகுதிக்கு இந்து முன்ன ணியினர் கொண்டு வந்து திங்க ளன்று பேரணி நடந்தது. அவிநாசி காவல் துறையினர் போக்குவரத்து மாற்றம் செய்யாமல், வழக்கம் போல் செயல்படும் சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால், குறித்த நேரத்திற்கு பேருந்துகள் செல்லாமல், ஆங்காங்கே காவல்து றையினர் மற்றும் போக்குவரத்து ஓட் டுனருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.