உதகை, ஜூலை 12- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 ஆவது சீசனுக்காக 125 வகைகளில் 2 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளியன்று தொடங்கியது. நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற் றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின் றன. இவற்றைக் காண உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடு களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், 2 ஆவது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடும் பணி வெள்ளி யன்று துவங்கியது. தோட்டக்கலை இணை இயக்கு நர் ஷிபிலா மேரி பங்கேற்று இப்பணிகளை துவக்கி வைத்தார். சால்வியா, மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின் உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் மற்றும் அமெரிக்கா, ஜப்பான் நெதர் லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 125 வகை மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட உள் ளது.