districts

img

சட்ட விரோதமாக விளைநிலங்களில் கிராவல் மண் எடுப்பதை நிறுத்தக்கோரி மனு

உடுமலை, டிச.8-  மடத்துக்குளம் தாலூகா பகுதியில்  நடைபெறும் கனிமவள கொள் ளையை தடுக்க கோரி மாவட்ட ஆட்சி யருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலூகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் மனு அனுப்பிள்ளார்.   இந்த மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது, திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் தாலுக்கா மெட்ராத்தி கிரா மத்தில் விவசாய நிலத்தில் க.ச எண் 805 மற்றும் 809ல் கிராவல் மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தினசரியும் டிப்பர் லாரிகள் மூலம் நூற்றுக்கணக்கான லோடுகளில் எவ்வித அனுமதியில்லாமல் கிரவல் மண்ணை எடுத்து சென்று விற்பனை செய்து வருவதால், அரசுக்கு வர வேண்டிய வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்படுகிறது.  இதன் மூலம் மாவட்ட கனிம வள துறையில்  உயர் அலுவலர்கள் மற்றும்  மடத்துக்குளம் வருவாய் துறையின ரும் முறைகேடுகளில் ஈடுபடுவது வெளிப்படையாக தெரியவருகிறது.

இதனால் மடத்துக்குளம் பகுதின் இயற்கை வளம் நாசமடைந்து வருகிறது. ஏற்கனவே மடத்துக்குளம் பகுதி யில் 500 ஏக்கருக்கு மேல் கல் குவாரி கள் அமைந்துள்ளது. அதில் தினசரி யும் நூற்றுக்கணக்கான லோடு கற் களும், ஜல்லி, எம்சாண்ட் ஆகிய வற்றை எடுத்து செல்கின்றனர்.  இதனால் மடத்துக்குளம் பகுதி யில் நிலத்தடி நீரும் இயற்கைத் தன்மை யும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி  உள்ளது. கடந்த வாரம் வெங்கடாபுரம் அருகிலே மண் கிரவல் எடுத்து ஐந்து  ஏக்கர் நிலத்தை பாழ்படுத்தி உள்ள னர்.  எனவே, உரிய நடவடிக்கை மேற் கொண்டு மடத்துக்குளம் தாலுகா வில் எவ்வித அனுமதியும் இன்றி செயல்படும் குவாரிகளையும், மெட் டராத்தி கிராமத்தில் விளை நிலங் களில் கிரவல் மண் மிக ஆழமாக தோண்டி எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், மடத்துக்குளம் பகுதி மக்களின் சார் பிலும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த கோரிக்கை மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.