திருப்பூர், டிச.24- தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூ ரில் முற்போக்கு அமைப்புகள் சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட திராவிடர் விடு தலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரி யாரின் 51 ஆவது நினைவு நாளை முன் னிட்டு திருப்பூரில் உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணி வித்து, கொள்கை முழக்கங்கள் எழுப்பி ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட் டன. இந்நிகழ்வுக்கு பொருளாளர் சு. துரைசாமி தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் தோழர் முகில் ராசு முன் னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழ் அமுதன், ஆதித் தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வன் ஆகியோர் பெரி யார் குறித்த பேசினர். மக்கள் பாதுகாப்பு அமைப்பின் மாநில நிறுவனத் தலைவர் கார்மேகம் தலைமையில் திருப்பூர் ரயில் நிலை யம் அருகாமையில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப் பட்டது. இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன் றியக்குழு சார்பில் பெருமாநல்லூர் நால் ரோட்டில் தந்தை பெரியார் உருவப டத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநகர மாவட்டச் செயலாளர் ஏ.பி.ஆர் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்று, சாதி மத பேதமின்றி அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என உறுதிமொழி ஏற்று கொண்டனர். தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்சியில், மாவட் டத் தலைவர் சன் முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் அகிலன், பல்ல டம் திருமூர்த்தி, திராவிட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் யாழ் ஆறுச்சாமி, கருணாகரன், வேணி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.நாச்சிமுத்து, ஆதித்தமிழர் பேரவை சார்பில் துணை பொதுச் செயலாளர் விடுதலைச் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.