districts

img

உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, செப்.7- அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த மூடநம் பிக்கை சொற்பொழிவாளர் மீது மாற் றுத்திறனாளி பாதுகாப்பு சட்டத் தின்படி வழக்கு பதிவு செய்யக் கோரி  அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சனியன்று உடுமலை வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வட் டாட்சியர் அலுவலகம் முன்பு சனியன்று  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் மாலினி தலைமையில் வகித்தார். இதில், சென்னை அசோக் நகரில்  செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் அறி வியலுக்கு புறம்பான, மூடநம்பிக்கை கருத்துக்களை மாணவ, மாணவிகளி டம் மஹா விஷ்ணு என்பவர் பேசி யுள்ளார். மேலும், இது குறித்து கேள்வி  கேட்ட மாற்றுத்திறனாளி தமிழ் ஆசிரி யரை மிரட்டும் தொனியில் பேசி யதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பட் டது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் பிறப்பை இழிவுபடுத்தி, மிரட்டல் விடுத்த நபர் மீது மாற்றுத்திறனாளி பாது காப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்  கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றி யச் செயலாளர் கனகராஜ், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர்  ஜெகதீ சன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.