உடுமலை, ஜூலை 23 - உடுமலை, குடிமங்கலம் மற் றும் மடத்துக்குளம் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புகள் உள்ளிட்ட பணிகள் தனியார் நிறுவனங்க ளுக்கு வழங்கப்பட்டது முதல் பல குளறுபடிகள் நிலவுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஆங் காங்கே பல போராட்டங்கள் நடை பெற்று வருவதாக புகார் எழுந்துள் ளது. உடுமலை சுற்றுவட்டார பகுதி களில் கடந்த வாரங்களில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல், ஊராட்சி அலுவல கம் முற்றுகை உள்ளிட்ட பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், செவ்வாயன்று குடி மங்கலம் ஒன்றியம் கொண்டம் பட்டி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருப்பூர் சாலையில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை தாலுகா குடிமங்க லம் ஒன்றியத்தில் கொண்டம்பட்டி ஊராட்சியில் வல்லக்குண்டாபுரம், சனுப்பட்டி, மசக்கவுண்டன் புதூர், வேலாயுதம்பாளையம் மற்றும் வச வநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிரா மங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகிறார் கள். இப்பகுதிகளுக்கு கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரு வதில்லை. இது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், உரிய நடவடிக்கை எடுக் கவில்லை எனக் கூறி பொதுமக்கள் காலி குடங்களுடன் உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் பூள வாடி பிரிவு பகுதியில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம் பவ இடத்திற்கு வந்த குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற் றும் காவல்துறையினர் பொது மக்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடிநீர் பிரச்சனைக்கு உடன டியாக தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை பொதுமக்கள் முடித்து கொண்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், திருமூர்த்தி அணையில் இருந்து நடைமுறைப் படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத் தில் தினமும் தண்ணீர் எடுக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த காலங்களில் குடிநீர் விநி யோகம் மற்றும் பராமரிப்பு பணி களை குடிநீர் வடிகால் வாரிய அதி காரிகள் மேற்கொண்டு வந்தனர். அப்போது எவ்வித பிரச்சனையும் இருக்கவில்லை. ஆனால் தற்பொ ழுது குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புகள் அனைத்தும் தனி யார் நிறுவனங்களுக்கு தரப்பட்டது முதல்தான் இது போன்ற குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின் றனர். குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளை அரசு தான் செயல்படுத்த வேண்டும். அப்போது தான் இது போன்ற பிரச்சனைகள் நிலவாது. தனியார் நிறுவனங்கள் லாப நோக் கத்தில் செயல்படுவார்கள். அவர்க ளால் எப்படி சேவையை வழங்க முடியும் என் கேள்வி எழுப்பினர்.