தருமபுரி, நவ.13- 60 வயது பூர்த்தியடைந்த அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் பாலக்கோடு ஒன்றிய 3 ஆவது மாநாடு சிக்கன் அள்ளி சமு தாயகூடத்தில் ஒன்றிய தலைவர் பி. முருகன் தலைமையில் நடைபெற் றது. சங்கத்தின் கொடியை எம்.சின்ன பையன் ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பாண்டியம்மாள் வர வேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் எம்.முத்து உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் சி.ராஜா, பொருளாளர் கே. மாதேஷ் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன், விவசாய தொழி லாளர் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே.கோவிந்தசாமி, சிஐடியு மாநி லக்குழு உறுப்பினர் சி.கலாவதி, விவ சாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.முருகன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்
இம்மாநாட்டில், பாலக்கோடு வட் டத்தில் தக்காளி விலைச்சல் அதிக மாக இருப்பதால் தக்காளி கூல் தொழிற் சாலை அமைக்க வேண்டும். பாலக் கோடு வட்டத்தில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அனைத்து தொழிலாளர்க ளுக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். பாலக்கோடு, மாரண்டஅள்ளி பேரூ ராட்சிகளில் இத்திட்டத்தினை விரிவுப் படுத்த வேண்டும். வீடு இல்லாத மக்க ளுக்கு மனைபட்டா வழங்கி அரசு வீடு கட்டி தரவேண்டும். 60 வயது பூர்த்திய டைந்த அனைத்து விவசாய தொழிலா ளர்களுக்கும் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் பாலக்கோடு ஒன்றிய தலைவராக ஜி. பாண்டியம்மாள், ஒன்றிய செயலாள ராக சி.ராஜா, பொருளாளராக சி.செல்வ ராஜ் உட்பட 15 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் நிறைவுரையாற் றினார்.