தருமபுரி, நவ. 25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாப்பாரப்பட்டி பகுதிக் குழு பேரவை கூட்டம் பாப்பாரப்பட்டியில் நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், வாலிபர் சங்க பாப்பாரப்பட்டி பகுதிக் குழு மாநாடு ஞாயிறன்று பகுதிக் குழு தலைவர் எம். சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் சபரீசன் மாநாட்டு கொடியேற்றிவைத்தார். எஸ் கவிந்த சாமி வரவேற்றார். மாவட்டச்செயலாளர் எம்.அருள் குமார் உள்ளிட்ட நிர்வாகிககள் உரையாற்றினர். சிபிஎம் பகுதிக் குழு செயலாளர் ஆர். சக்திவேல், மாவட்டக் குழ உறுப்பினர் டி.ஆர். சின்னசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், பகுதிக் குழு தலைவராக பி. ஜெகநாதன், செயலா ளராக எம். சிலம்பரசன், பொருளாளராக கே.வேலாயுதம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட் டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பாப்பாரப் பட்டியில் அரசு வேளாண்மைக் கல்லூரி தொடங்கவேண்டும். மலையூர் பிக்கிலி பஞ்சாயத்து மலையூர் மலை கிரா மத்திற்கு அரசு பேருந்து இயக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.