மேட்டுப்பாளையம், ஜூலை 28- காரமடை அருகே உள்ள மருதூர் ஊராட்சி மன்றத் தலை வரை பதவி நீக்கம் செய்யக்கோரி, 9 ஊராட்சி மன்ற உறுப் பினர்கள் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், கார மடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதூர் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி மன்றத் தலைவராக பூர்ணிமா என்பவர் உள்ளார். கடந்த மூன்று மாதமாக ஊராட்சி கூட் டங்கள் நடத்தப்படாத நிலையில், வெள்ளியன்று நடை பெற்ற ஊராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து, 9 உறுப் பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஏற்கனவே மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் செய்ததாக மருதூர் ஊராட்சித் தலைவர் பூர்ணிமா மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தன் னிச்சையாக செயல்பட்டு எவ்வித வளர்ச்சி பணிகளையும் செய்யாத தலைவர் பூர்ணிமாவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி னர். இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி மற்றும் காவல் துறை அதிகாரிகள், தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத் திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் தங்களது இரண்டு மணி நேர தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.