தஞ்சாவூர், பிப்.21- தஞ்சாவூர் மாவட்டத்தில் 434 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு நாள்தோறும் சுமார் 1,000 மூட்டை வரை விவசாயி களிடம் நெல் கொள்முதல் செய்யப்படு கிறது. கொள்முதலின் போது விவசாயி களிடம் கூடுதலாக நெல் எடுப்பது, மூட்டைக்கு ரூ. 40 வரை பெறுவது உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து எழுந்தன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகள் காவிரி டெல்டா மாவட்டங்களில் திடீர் ஆய்வு செய்து தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 19 கொள்முதல் பணியாளர்களை பணி யிடை நீக்கம் செய்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் பணியாற்றும் கொள் முதல் நிலைய பட்டியல் எழுத்தர்கள், உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டனர். தங்க ளது கோரிக்கையை மனுவாக ஆட்சியர் ம.கோவிந்தராவிடம் வழங்கி முறை யிட்டனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே ஈரப்பதம் அளவில் கொள்முதல் செய் யப்படுகிறது. கொள்முதல் ஆன நெல் மூட்டைகள் வாரக்கணக்கில் கொள் முதல் நிலையங்களில் தேங்கியுள்ளன. இதனால் மூட்டைகள் தேக்கமடைந்தால் எடையிழப்பு ஏற்படுவது இயற்கையின் நியதி.
பணியாளர்களை நிர்ப்பந்திப்பதா?
ஆனால் உயர் அதிகாரிகள் எடை யிழப்புக்கு கொள்முதல் நிலைய பணி யாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என கூறி நிர்ப்பந்தம் செய்து பணி யிடை நீக்கம் செய்வது கண்டனத் துக்குரியது. அவ்வாறு நீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அபராதத் தொகையை பணியாளர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது. மேலும், நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டாய மாமூல் ரூ.3 ஆயிரம் வரை வசூலிப்பதை உடன் தடுக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொள் முதல் நிலையங்கள் இயங்கும்போது சுமை தூக்கும் பணியாளர்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை. ஆனால் பணியாளர்களை உயர் அதிகாரிகள் நிர்பந்தம் செய்து கொள்முதல் நடை பெற்றாக வேண்டும் என்பதை தடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் அவ் வப்போது விவசாயிகளுக்கும், பணியா ளர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனால் கொள்முதல் பணியில் ஈடு பட்டுள்ளவர்களுக்கு உரிய பணி பாது காப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட் டவை மனுவில் கூறப்பட்டுள்ளது.