நாமக்கல், டிச.18- ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக, தலைமுடி வாசனை திரவியத்தை அனுப்பிய ஆன்லைன் விற்பனை நிறுவனம், பாதிக்கப் பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.44 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ஆர்.பி.புதூரைச் சேர்ந்த கே.சரவணகுமார் (36) என்பவர், செல் போன் ஒன்றை வாங்குவதற்காக பிரபலமான ஆன்லைன் விற்பனை இணையதளத்தை (Amazon seller Service Private Limited) பார்வையிட்டுள்ளார். இணையதளத்தில் சர வணகுமார் தேர்வு செய்த மொபைல் போன் விற்பனையாளராக கோவை மாவட்டம், பல்லடம் சாலையிலுள்ள தனியார் நிறுவனம் (Sarshita Aashiyana (p) Ltd.,) காட்டப்பட்டி ருந்தது. தேர்வு செய்த மொபைல் போனை வாங்க ஆன்லைன் விற்பனை இணையதளத் தின் மூலமாக கிரெடிட் கார்டில் அவர் ரூ.24,519யை செலுத்தியுள்ளார். பணம் செலுத்தப்பட்ட மறுநாளே கூரியர் மூலம் சரவணகுமாரின் முகவரிக்கு பார்சல் வந் துள்ளது. அதனை அவர் பிரித்துப் பார்த்த போது, தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவிய சிறிய பாட்டில் ஒன்று இருந் துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக் கையாளர் இதுகுறித்து ஆன்லைன் விற் பனை இணையதள நிறுவனத்தில் மின்னஞ் சல் மூலமாகவும், தொலைபேசி வழியாக வும் பலமுறை புகார் தெரிவித்தும், செல் போன் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஆன்லைன் விற்பனை நிறு வனத்தின் மீதும், இணையதளத்தில் விற்ப னையாளராக காட்டப்பட்ட நிறுவனத்தின் மீதும், சரவணகுமார் கடந்த ஜூன் மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவ டைந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினர் ஆர்.ரமோலா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில், சாட்சியம் மற்றும் ஆவ ணங்கள் மூலம் ஆன்லைன் விற்பனை இணை யதள நிறுவனமும், அதன் விற்பனையாள ரும் சேவை குறைபாடு புரிந்துள்ளதை வழக்கு தாக்கல் செய்தவர் நிரூபித்துள் ளார். வாடிக்கையாளர் செலுத்திய ரூ.24,519 மற்றும் சேவை குறைபாட்டால் வாடிக்கையா ளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை நான்கு வார காலத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு வழங்க வேண்டும், என உத்தரவிட்ட னர்.