உதகை, ஜூலை 10- ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோதப் போக்கை கண் டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தின் தொடர்ச்சி யாக தமிழகத்தில் பல்வேறு பகுதி களில் சிஐடியுவினர் ஆவேச ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் சட்ட தொகுப்பு கள் நான்கினை ரத்து செய்ய வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்தும் அனைத்து வடிவங்களுக் கும் முற்றுப்புள்ளி வைக்க வேண் டும். அனைத்து தொழிலாளர்க ளுக்கும் குறைந்தபட்ச மாத ஊதிய மாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண் டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பை உத்திரவாதப்ப டுத்தி, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்று ஊதி யம், இதர சலுகைகள் அனைத்தை யும் வழங்க வேண்டும். அக்னிவீர், ஆதித்வீர், கொரிலாவீர் போன்ற குறிப்பிட்ட கால அளவிற்கான வேலைவாய்ப்பு திட்டங்கள் அனைத்தையும் கைவிட வேண் டும். தொழிலாளர்களின் பிஎப் நிதியை செலுத்தாத முதலாளிக ளுக்கு அபராத விகிதத்தை குறைத்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு, மக்களை தேடி மருத் துவம் உள்ளிட்ட திட்ட ஊழியர் கள் அனைவரையும் அரசு ஊழி யர்களாக அங்கீகரித்து பணி நிரந்த ரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) சார்பில் புதனன்று நாடு தழு விய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டம், உதகை ஏ,டிசி திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எல். சங்கரலிங் கம் தலைமை வகித்தார். மாவட் டச் செய்லாளர் வினோத் துவக்க வுரையற்றினர். இதில், எம்.கவிதா, சேகர், பிரித்வி ராஜ் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் நன்றி கூறினார். பந்தலூர் இதைபோல் நீலகிரி மாவட்டம், பந்தலூர் பஜாரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பி னர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண் டன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர் செல் வம் ஆகியோர் கண்ட உரை நிகழ்த் தினர். இதில், தோட்டத் தொழியாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் சம்சுதீன், பழனிசாமி, சுமைதூக்கும் தொழியாளர் சங்கத் தலைவர் சக்தி, நிர்வாகிகள் வினு, மனோகரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். ஈரோடு தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை ரத்து செய்ய வலி யுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் ஈரோடு, சூரம் பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் என்.முரு கையா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன் சிறப்புரையாற்றினார். ஆர்ப் பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற னர்.