சேலம், டிச.24- குடியிருப்புப் பகுதி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. சேலம் மாவட்டம், வீரகனூர், திருச்சி பிரதான சாலை யோரம், அம்பேத்கர் நகர் குடியிருப்புப் பகுதியின் அருகே உள்ள கரையான்திட்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, திங்களன்று அப்பகுதி பொதுமக்கள் வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற் றுகையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், 2006 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு திட்டத்தை அமல் படுத்த இருந்த நிலையில், எங்களின் போராட்டத்தால் அத்திட் டம் அப்போது கைவிடப்பட்டது. இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்தின் வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும். எனவே, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் விவசாயக் கிணறுகள், நிலத்தடி நீர்வள ஆதாரங் கள் அழிந்து விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும். வீர கனூரில் அரசு கட்டடங்களை ஊரின் மேற்குப் பகுதியில் அமைத்துக் கொள்கின்றனர். ஆனால், குப்பைக்கிடங்கு, மயானம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவற்றை எங்கள் பகுதியில் அமைக்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், விவசாயக்களம், கிடங்கு, உழவர் சந்தை, சமுதாய நலக் கூடம், வருவாய்த்துறை அலுவலகம் போன்ற வற்றை கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம், என்றனர்.